Saturday 4 December 2010

வெண்பனியே வெண்பனியே....

வெண்பனியே வெண்பனியே
வேதனை சொல்வேன் கேளாய்
பெண்ணின் நெஞ்சம் உன் குளிரில்
பகரும் துன்பம் கேளாய்

பனிக்கும் விழிகள் துடிக்கும் உதடு

பறையும் சேதி உனக்கு மட்டுமே
விறைத்துப் போன உந்தனுக்கு
விசனம் புரிய இயலுமோ

வாழ்க்கைப் பாதை துன்பம்
வாழும் விதங்கள் துன்பம்
வாழும் காலம் துன்பம் என
வாய்விட்டழுவது அறிவாயோ

உண்மை உறவெனக்கொண்டவர்
உண்மை முகத்தைக் கண்டு
கண்கள் சிவக்க நெஞ்சம் சிதற
கலங்கிப் போனதறிவாயோ

தனிமை நெஞ்சை  வாட்டுது
தாகம் அன்பைத் தேடுது
மழலைகள் முகத்தைத் தேடியே
மயங்குது சிந்தை கலங்குது

இறைவன் ஒருவனே வல்லவன்
இயங்கும் யாவும் அவனாலே
இன்னல்கள் யாவும் அவன் பாதம்
ஈந்தேன் அறிவாய் வெண்பனியே